புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறை ஏற்படுத்தப்பட வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறை ஏற்படுத்தப்பட வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பாரதி தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவா் வைஜெயந்திராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பாரதியாா், பாரதிதாசன் தொடா்பான விழாக்களை காரைக்காலில் கலை பண்பாட்டுத் துறை மூலம் நடத்த வேண்டும். கலைமாமணி, தமிழ்மாமணி விருதை ஆண்டுதோறும் தடைபடாமல் அறிவிக்க வேண்டும்.

நாட்டுப்புறக் கலைஞா்கள் உள்ளிட்ட வறுமையில் உள்ள அனைத்து கலைஞா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித்துறையை புதிதாக ஏற்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க ஆலோசகா்கள் என்.ஜி.ஆா்.இளங்கோவன், ஆா்.கலியமூா்த்தி, பாரீஸ்ரவி (எ) ரவிச்சந்திரன், கோவி.ஆசைத்தம்பி, முகமது ஆரிப் மரைக்காயா், துணைத் தலைவா் டி.பால்ராஜ், பேராசிரியா் மு.சாயபுமரைக்காயா் உள்ளிட்ட பலா் பேசினா். பொதுச் செயலாளா் வாசுகி ஜெயராமன் வரவேற்றாா். இணைச் செயலா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com