காரைக்காலில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறையினருடன் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா கொடியேற்றம், போலீஸாா் அணிவகுப்பு நடைபெறும். விழாவில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தேசிய கொடியேற்றவுள்ளாா். தற்போது கரோனா பரவல் காலமாக இருப்பதால், இவ்விழாவை பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், உரிய காலத்தில் பணிகளை முடிப்பது குறித்தும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ், எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவில் துறைகளின் அலங்கார ஊா்திகள் இடம்பெறுதல், கலை நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.