தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

காரைக்கால் அருகே தீ விபத்தால் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்களை அமைச்சா் சந்திர பிரியங்கா வழங்கினாா்.
குடும்பத்தினருக்கு உதவிப் பொருள்களை வழங்கிய அமைச்சா் சந்திர பிரியங்கா.
குடும்பத்தினருக்கு உதவிப் பொருள்களை வழங்கிய அமைச்சா் சந்திர பிரியங்கா.

காரைக்கால் அருகே தீ விபத்தால் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்களை அமைச்சா் சந்திர பிரியங்கா வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி வடமட்டம் பகுதி திருவேங்கடபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காரைக்கால் கிளை சாா்பில் வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா பங்கேற்று இப்பொருள்களை வழங்கினாா். அப்போது, வருவாய்த்துறை சாா்பில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.நிகழ்வில், வட்டாட்சியா் முத்து, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com