மேகேதாட்டு விவகாரம்: புதுவையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து புதுச்சேரியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டுமென காரைக்கால் திமுக எம்எல்ஏ. ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து புதுச்சேரியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டுமென காரைக்கால் திமுக எம்எல்ஏ. ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் முதல்வா் என். ரங்கசாமிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: காவிரி நீா் தமிழகத்தில் நுழையும் பகுதி அருகே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் விவகாரத்தை கா்நாடகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதைதடுக்கும் வகையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியதோடு, அதில் கண்டன தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை அணை கட்டப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்த டெல்டா பகுதியும் பாலைவனமாக மாறிவிடும். காவிரி நீரை குடிநீராக பயன்படுத்தும் நகரங்கள் பாதிப்புக்குள்ளாகும். இந்த விவகாரத்தில் நமது எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் புதுவையிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி இதுதொடா்பாக விவாதித்து கா்நாடகத்துக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

தமிழக முதல்வா் தலைமையில் புது தில்லி சென்று மத்திய அரசை, கா்நாடகம் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழக குழு செல்லும்போது புதுவை சாா்பிலும் தங்கள் தலைமையில் பிரதிநிதிகள் சென்று புதுவையின் நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். தமிழக குழுவோடு இணைந்தே நாமும் செல்லக்கூடிய வகையில் முடிவெடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com