காரைக்காலில் 19 பேருக்கு கரோனா தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 752 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நல்லம்பல் 5, காரைக்கால் நகரம் 4, திருப்பட்டினம் 4, திருநள்ளாறு 3, நிரவி 2, கோயில்பத்து 1 என 19 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,69,386 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 14,854 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,474 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 125 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 16 போ், தீவிர சிகிச்சை பிரிவில் 7 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 72,555 பேருக்கும், 2-ஆவது தவணையாக 15,753 பேருக்கும் என 88,308 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com