கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் அமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா். இதில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தைக் கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.எம்.தமீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com