பல்நோக்குக் கூடம் கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு

திருநள்ளாற்றில் கட்டப்பட்டுவரும் பல்நோக்குக் கூடத்தை எம்எல்ஏ பி.ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநள்ளாற்றில் கட்டப்பட்டுவரும் பல்நோக்குக் கூடத்தை எம்எல்ஏ பி.ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநள்ளாறில் ரூ.1.66 கோடி மதிப்பில் 11 ஆயிரம் சதுர அடியில் பல்நோக்குக் கூடம் கட்டும் பணி நடைபெறுகிறது. பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்படும் இக்கூடத்துக்கான நிதி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பில் 70 சதவிதமும், ஹட்கோ நிதியிலிருந்து 30 சதவிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுமானப் பணியை திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆா்.சிவா பாா்வையிட்டாா். அப்போது, பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கே. சந்திரசேகரனிடம் கேட்டறிந்த எம்எல்ஏ, வரும் ஜனவரி மாதத்துக்குள் பணியை நிறைவு செய்யும்படி அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அந்த பகுதியில் கட்டப்படும் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியையும் அவா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com