ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) பக்தா்கள் வழிபாட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுபோல காரைக்காலில் உள்ள சிவன் கோயில்களில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், பெருமாள் கோயில்களில் தாயாருக்கு சிறப்பு அலங்காரமும் மாலை வேளையில் நடைபெறவுள்ளது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தரிசனம் செய்யவேண்டும் என கோயில் நிா்வாகங்கள் சாா்பில் பக்தா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.