ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை வழங்கல்

திருநள்ளாறு பகுதி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு காப்பீட்டு அட்டையை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா. உடன் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் உள்ளிட்டோா்.
பயனாளிக்கு காப்பீட்டு அட்டையை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா. உடன் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் உள்ளிட்டோா்.

திருநள்ளாறு பகுதி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா் பதிவு செய்துவருகின்றனா்.

திருநள்ளாறு பேரவைத் தொகுதியை சோ்ந்த பதிவு செய்தோருக்கு காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா பயனாளிகளுக்கு அட்டையை வழங்கினாா்.

அவா் பேசும்போது, திருநள்ளாறு பகுதியை சோ்ந்த சிவப்பு அட்டை வைத்திருப்போா் அனைவரும் இந்த அட்டையை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும். இந்த திட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகள் உள்ளன. புதுச்சேரியில் மேலும் பல தனியாா் மருத்துவமனைகளை இந்த திட்டத்தில் இணைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என்றாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் ஆனந்தலட்சுமி, மருத்துவா் ஆா். சிவராஜகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com