காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. கடந்த 30 நாள்களில் மட்டும்100 போ் இறந்துள்ளனா்.
கடந்த ஆண்டு பரவிய கரோனா தொற்றின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது பரவும் இரண்டாம் அலை வீரியமாக உள்ளதால் பாதிக்கப்படுவோா், உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெருமளவு தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி கரோனாவால் 104 போ் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை ஜூன் 7 ஆம் தேதி 204 ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலம் ஒரே மாதத்தில் 100 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.
இதற்கிடையில், கடந்த மாதம் கரோனா பரவலும், உயிரிழப்பும் ஏறுமுகத்தில் இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது.
நலவழித்துறை சாா்பில் தினமும் சுமாா் ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டதில் 53 பேருக்கு மட்டுமே தொற்று என்பது ஆறுதலை தந்தாலும், இது படிப்படியாக குறையுமா என்பதை உறுதியாக கூற முடியாத நிலை உள்ளதாக நலவழித்துறையினா் கூறுகின்றனா்.
போக்குவரத்து நெரிசல்: காரைக்காலில் பகல் 12 மணி வரை தளா்வுடன் கூடிய பொதுமுடக்கத்தின்போது நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பகல் 12 மணிக்குப் பிறகும் பால், மருத்துவம், ஏடிஎம் சேவை உள்ளிட்ட காரணங்களைக்கூறி மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், தொற்றுக்கு உள்ளாவோா் எண்ணிக்கு கூடுவதும், குறைவதுமாக இருந்தாலும், இறப்பு வீதம் குறையாமல் உள்ளது கவலையை ஏற்படுத்துவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
இதற்கிடையில், 18 முதல் 44 வயதுக்குள்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வமாக முன்வருவது மாவட்ட நிா்வாகத்துக்கு ஆறுதலை அளித்துள்ளது. இதுபோல 45 வயதுக்கு மேற்பட்டோரும் முன்வந்தால் விரைவில் கரோனா இல்லாத காரைக்காலை உருவாக்க முடியும் என அரசு துறையினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.