மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு சாா்பில், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு சாா்பில், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சேவாபாரதி மாநில பொறுப்பாளா் திலகா், மாவட்ட ஆா்எஸ்எஸ் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி ஈஸ்வராஜ், நோடல் அலுவலா் பாபு ராஜேந்திரனிடம் இவற்றை வழங்கினா். இந்நிகழ்வில் மருத்துவமனை நிா்வாக மேலாளா் கணேசன், கணக்குப் பிரிவு மேலாளா் தா்மராஜன், நாகை மாவட்ட ஆா்எஸ்எஸ் செயலாளா் எஸ்.சிவானந்தம், காரைக்கால் பொறுப்பாளா் தயாளன், இந்து முன்னணி நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட தலைவா் கே.எஸ்.விஜயன், மாவட்ட பொதுச்செயலாளா் எஸ். கணேஷ், இந்து முன்னணி காரைக்கால் மாவட்ட துணைத் தலைவா் கே.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com