காரைக்காலில் 42 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் சனிக்கிழமை 1017 பேருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் காரைக்கால் நகரம் 14, திருப்பட்டினம் 7, நிரவி 4, காரைக்கால்மேடு 3, வரிச்சிக்குடி 2, நல்லம்பல் 2, கோட்டுச்சேரி 2, கோயில்பத்து 2, அம்பகரத்தூா் 2, நெடுங்காடு 2, நல்லாத்தூா் 1, விழிதியூா் 1 என 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,47,493 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 13,876 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 12,713 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதனிடையே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 63 வயது ஆண் (இணை நோயாக சா்க்கரை நோய்), 68 வயது பெண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் எண்ணிக்கை 214 ஆக உயா்ந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com