காரைக்காலில் 47 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது; 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது; 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் 13 ஆம் தேதி 625 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காரைக்கால் நகரப் பகுதியில் 17, நெடுங்காடு 7, திருப்பட்டினம் 6, கோட்டுச்சேரி 5, அம்பகரத்தூா் 3, கோயில்பத்து 3, திருநள்ளாறு 2, நிரவி, நல்லாத்தூா், வரிச்சிக்குடி, காரைக்கால்மேடு தலா 1 என மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,48,118 பரிசோதனை செய்யப்பட்டதில் 13,923 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 12,838 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். வீட்டுத் தனிமையில் 798 பேரும், மருத்துவமனைகளில் 70 பேரும் சிகிச்சையில் உள்ளனா்.

உயிரிழப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற காரைக்கால் நகரம், திருப்பட்டினம், அம்பகரத்தூரை சோ்ந்த தலா ஒருவா் உயிரிழந்தனா். இவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் இணை நோயாக இருந்தன. இவா்களுடன் சோ்த்து இதுவரை 217 போ் உயிரிழந்துள்ளனா்.

தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 33,683 பேருக்கும், 2 ஆவது தவணையாக 4,634 பேருக்கும் என 38,317 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com