காரைக்காலில் மேலும் 6 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 8 ஆம் தேதி 426 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு 5, காரைக்கால் நகரில் ஒருவருக்கு என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 88,958 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,046 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,929 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 38 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 7 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 595 போ், முன்களப் பணியாளா்கள் 741 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 190 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்ட 259 போ், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 39 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com