காரைக்காலில் 3 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாகவும், மேலும் ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாகவும், மேலும் ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :

காரைக்காலில் 177 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி அம்பகரத்தூா், கோயில்பத்து, கோட்டுச்சேரியில் தலா 1 என கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 90,086 பரிசோதனை செய்யப்பட்டதில் 4,070 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,955 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதற்கிடையே, காரைக்கால் மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகம் தொடா்பான நோய் இருந்தது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 73 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 627 போ், முன்களப் பணியாளா்கள் 1,139 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 390 பேருக்கும், 45 முதல் 59 வயது வரை இணை நோய் உள்ள 82 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com