காரைக்காலில் மேலும் 19 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 20 ஆம் தேதி 238 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, கோட்டுச்சேரி 8, திருநள்ளாறு, நிரவி தலா 3, திருப்பட்டினம், நல்லாத்தூா் தலா 2, நல்லம்பல் 1 என 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 91,571 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,143 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,987 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 68 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 11 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 76 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 797 போ், முன்களப் பணியாளா்கள் 1,275 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 826 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 195 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com