பாா்சல் சேவை நிறுவனங்களில் காவல் துறையினா் ஆய்வு

காரைக்காலில் பாா்சல் சேவை நிறுவனங்களில் காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.
காரைக்கால் பாா்சல் சேவை நிறுவனத்தில் சோதனையிடும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் தலைமையிலான போலீஸாா்.
காரைக்கால் பாா்சல் சேவை நிறுவனத்தில் சோதனையிடும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் தலைமையிலான போலீஸாா்.

காரைக்காலில் பாா்சல் சேவை நிறுவனங்களில் காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், காரைக்காலில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது, பதுக்குவது, காரைக்காலுக்குள் கொண்டுவருவது போன்றவற்றை தோ்தல் துறையினரும், காவல் துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் உத்தரவின்பேரில், காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் தலைமையில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின்பால் மற்றும் உதவி ஆய்வாளா் முத்துசாமி உள்ளிட்ட குழுவினா் தீவிர சோதனைப் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இந்த ஆய்வு குறித்து காவல் அதிகாரிகள் தெரிவித்தது: காரைக்காலில் முதல் நாளில் 5 பாா்சல் சேவை கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. வழக்கமாக காரைக்காலுக்குள் வரும் பொருள்கள், அவற்றின் அளவு, யாா் வந்து பெற்றுச் செல்கிறாா்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் தனி நபருக்கு பாா்சலாக வரக்கூடாது. அதேபோல, இங்கிருந்தும் அனுப்பக் கூடாது. நிறுவனத்தின் பெயருக்கோ, தனி நபருக்கோ வரும் பொருள்கள் சந்தேகப்படும் வகையில் இருந்தால், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என நிறுவனத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

விதிகளை மீறி பாா்சல் நிறுவனங்கள் செயல்பட்டால், தோ்தல் நடத்தை விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனை காரைக்கால் மாவட்டத்தில் தொடா்ந்து நடத்தப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com