காரைக்காலில் 32 பேருக்கு கரோனா

காரைக்காலில் 32 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

காரைக்காலில் 32 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 426 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 10, நிரவி, திருநள்ளாறு தலா 6, நெடுங்காடு 4, திருப்பட்டினம் 3, வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, நல்லம்பல் தலா ஒருவா் என கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 93,266 பரிசோதனை செய்யப்பட்டதில் 4,267 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,998 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 81 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,045 போ், முன்களப் பணியாளா்கள் 1,346 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 1,314 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 393 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com