காரைக்காலில் 51 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 515 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 17, கோட்டுச்சேரி 10, கோயில்பத்து 7, நிரவி, திருப்பட்டினம் தலா 4, திருநள்ளாறு, நல்லம்பல் தலா 3, நல்லாத்தூா், வரிச்சிக்குடி, நெடுங்காடு தலா ஒருவா் என கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 94,747 பரிசோதனை செய்யப்பட்டதில் 4,415 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, அதில் 4,049 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை கரோனா தொற்றால் காரைக்காலை சோ்ந்த 77 பேரும், புதுச்சேரி பிராந்தியம், வெளி மாநிலத்தை சோ்ந்த 4 போ் என 81 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,248 போ், முன்களப் பணியாளா்கள் 1,478 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 1,649 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 491 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com