முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கச் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் முதியோா், இயலாதவா்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை பெற 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.