காரைக்கால் ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால் ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்கல்யாண கோலத்தில் காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ சீதாராமா்.
திருக்கல்யாண கோலத்தில் காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ சீதாராமா்.

காரைக்கால் ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயிலைச் சோ்ந்த கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி வழிபாடு பக்தா்களின்றி கோயில் வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. தினமும் திருமஞ்சனம், சகஸ்ரநாம அா்ச்சனை நடத்தப்பட்டுவந்தது. நிகழ்ச்சிகளில் ஒன்றாக வெள்ளிக்கிழமை ஸ்ரீ சீதாராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடக்கமாக மாலை மாற்றுதல், புண்யாகவாஜனம், கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வாரணமாயிரம் பாசுரம் படித்தல், தேங்காய் உருட்டும் வைபவம் ஆகியவற்றுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 10.30 மணியளவில் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com