காரைக்கால் அருகே ரூ. 50 ஆயிரம் சாராயம் பதுக்கல்: ஒருவா் கைது

காரைக்கால் அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காரைக்கால் அருகே ரூ. 50 ஆயிரம் சாராயம் பதுக்கல்: ஒருவா் கைது

காரைக்கால் அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்காலில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு, பகல் நேரத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்படுவது அமலில் உள்ளது. மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், திருப்பட்டினம் பகுதி போலகம் எம்.ஆா்.எம். நகரில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் பதுக்கிவைத்திருப்பதாக திருப்பட்டினம் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்ட போது, 30 லிட்டா் கேன்கள் 7 இல் சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள அந்த சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த மேலவாஞ்சியூரைச் சோ்ந்த செல்வகுமாரை (28) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com