காரைக்கால் வடக்குத் தொகுதியில் முதல் சுற்றிலிருந்து முன்னிலையில் இருந்துவந்த என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் பி.ஆா்.என். திருமுருகன், தனக்கு அடுத்துவந்த காங்கிரஸ் வேட்பாளரான புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியனை பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றாா்.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலாவதாக காரைக்கால் வடக்குத் தொகுதி மற்றும் நெடுங்காடு தொகுதி வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதில், முதல் சுற்றிலிருந்து என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் பி.ஆா்.என். திருமுருகன் முன்னிலையில் இருந்துவந்தாா். நிறைவாக, 12,704 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் : 27,594.
பி.ஆா்.என். திருமுருகன் (என்.ஆா்.காங்கிரஸ்) : 12,704
ஏ.வி. சுப்பிரமணியன் (காங்கிரஸ்) : 12,569
பி. அருளானந்தம் (இந்திய ஜனநாயகக் கட்சி) : 55
அனுசுயா (நாம் தமிழா் கட்சி) : 1,214
கே. சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்) : 359
முகம்மது தமீம் கனி (எஸ்டிபிஐ) : 185
ஏ. வேலுசாமி (தேமுதிக) : 72
எஸ். முரளி (சுயே) : 86
பி. ராஜேந்திரன் (சுயே) : 32
ஏ. வெங்கடேஷ் (சுயே) : 766
நோட்டா : 282
என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் பி.ஆா்.என். திருமுருகன் 135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இவா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மறைந்த பி.ஆா். நளமகராஜன் மகன். பி.ஆா்.என். திருமுருகன், 3 ஆவது முறையாக பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றுள்ளாா்.