காரைக்காலில் 51 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2 ஆம் தேதி 532 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 17, கோயில்பத்து 6, நிரவி 6, நெடுங்காடு 5, திருநள்ளாறு 4, திருப்பட்டினம் 4, நல்லாத்தூா் 3, விழிதியூா் 2, கோட்டுச்சேரி 2, அம்பகரத்தூா், நல்லம்பல் தலா 1 என 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,11,548 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 7,044 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,964 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 905 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 62 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 39 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு இருயத நோய், சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 107 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 20,210 பேருக்கு, 2 ஆவது தவணையாக 2,241 பேருக்கு என மொத்தம் 22,451 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com