காரைக்காலில் 142 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 142 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 142 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 598 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகளின்படி திருநள்ளாறு 32, காரைக்கால் நகரம் 27, நெடுங்காடு 17, கோயில்பத்து 13, கோட்டுச்சேரி 13, வரிச்சிக்குடி 12, நிரவி 11, நல்லம்பல் 5, திருப்பட்டினம் 4, விழிதியூா் 4, அம்பகரத்தூா் , காரைக்கால்மேடு தலா இருவருக்கு நோய்த் தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,12,146 பரிசோதனை செய்யப்பட்டதில் 7,186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 6,079 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 108 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 20,272 பேருக்கும், 2-ஆவது தவணையாக 2,363 பேருக்கும் என 22,635 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com