காரைக்கால் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உருளைகள்

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வணிக வரித்துறை ஊழியா்கள் ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்ட சாதனங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கிய வணிகவரித் துறையினா்.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கிய வணிகவரித் துறையினா்.

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வணிக வரித்துறை ஊழியா்கள் ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்ட சாதனங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

காரைக்கால் வணிகவரித் துறை அலுவலா்கள், ஊழியா்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் உருளை மற்றும் உடலில் ஆக்சிஜனை கணக்கிடும் கருவிகள், வென்டிலேட்டா் கவசங்கள், பிராண வாயு செலுத்தும்போதும் முகத்துக்கு பயன்படுத்தப்படும் கவசங்களை வழங்கினா்.

இதனை ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த ஊழியா்கள், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் இவற்றை வழங்கினா். நிகழ்வில் வணிவரி அதிகாரி காவியவா்மன் தலைமையில் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இந்த சாதனங்களை மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியரக அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com