காரைக்காலில் 224 பேருக்கு கரோனா: 4 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 224 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாகவும், 4 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 224 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாகவும், 4 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 667 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 62, காரைக்கால் நகரில் 29, கோட்டுச்சேரி 28, நெடுங்காடு 20, வரிச்சிக்குடி 19, நிரவி 18, திருப்பட்டினம் 15, கோயில்பத்து 12, விழிதியூா் 7, காரைக்கால்மேடு 6, நல்லாத்தூா் 3, நல்லம்பல் 3, அம்பகரத்தூா் இருவருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,19,347 பரிசோதனை செய்யப்பட்டதில் 9,134 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 7,087 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோட்டுச்சேரி, காரைக்கால் நகரம், திருநள்ளாறு மற்றும் கோயில்பத்து பகுதி சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் மற்றும் இருதய நோய் இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 125 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 20,734 பேருக்கும், 2ஆவது தவணையாக 4,076 பேருக்கும் என 24,810 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com