காரைக்காலில் 255 பேருக்கு கரோனா தொற்று: 6 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 6 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 6 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 15 ஆம் தேதி 738 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 58, திருநள்ளாறு 32, நிரவி 30, கோயில்பத்து 28, வரிச்சிக்குடி 20, கோட்டுச்சேரி 19, நெடுங்காடு 14, அம்பகரத்தூா் 12, நல்லம்பல் 12, காரைக்கால்மேடு 11, திருப்பட்டினம் 8, விழிதியூா் 7, நல்லாத்தூா் 4 என 255 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,20,585 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 9,549 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7,420 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 1,878 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 85 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 போ் உள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டிருந்த திருப்பட்டினத்தை சோ்ந்த 3 போ், நெடுங்காடு, நல்லம்பல், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த தலா ஒருவா் என 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்கள் அனைவருக்கும் சா்க்கரை நோயும், சிலருக்கு ரத்த அழுத்தமும் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 132 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் முதல் தவணையாக 20,877 பேருக்கும், 2 ஆவது தவணையாக 4,404 பேருக்கும் என 25,281 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com