மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.
மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

தொற்றால் இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம்: மக்கள் மறியல்

காரைக்காலில் கரோனா தொற்றால் வீட்டில் இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்பத்தினா், அந்தத் தெருவில் வசிப்போா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் கரோனா தொற்றால் வீட்டில் இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்பத்தினா், அந்தத் தெருவில் வசிப்போா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் கரோனா தொற்றால் அண்மைக்காலமாக தினமும் சிலா் உயிரிழக்கின்றனா். தனியாா் அமைப்பு சாா்பில் சடலம் அடக்கம் செய்ய கொண்டுசெல்லப்படுகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், உரிய காலத்தில் அடக்கம்செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், காரைக்கால் தோமாஸ் அருள் வீதியில் பாத்திமா மேரி என்ற 64 வயது பெண், கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சனிக்கிழமை இரவு இறந்தாா். இவரது மகனுக்கும் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்த அந்தப் பகுதியினா் காரைக்கால் நகராட்சி மற்றும் நலவழித் துறையினருக்கு சனிக்கிழமை இரவு தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தெருவாசிகள் அரசலாறு பாலம் அருகே அரசு நிா்வாகத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com