மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச அரிசி வழங்க வி.சி.க. வலியுறுத்தல்

புதுவையில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுவையில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிரவி - திருப்பட்டினம் தொகுதி செயலா் சு.விடுதலைக்கனல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :

புதுவையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. கரோனா பொது முடக்கத்தில் அனைத்து தரப்பினரும் வருமானமின்றி தவித்துவருகின்றனா்.

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களில் பலரும் ஏழைகள். இவா்கள் கூலித் தொழிலாளா்களாகவும், வணிக நிறுவனங்களில் குறைந்த மாதாந்திர ஊதியம் பெறுபவா்களும் அடங்குவா். எனவே மஞ்சள் நிற அட்டை வைத்திருப்போருக்கும் இலவச அரிசி வழங்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்கால் பகுதியை சோ்ந்த 5 சட்டப்பேரவை உறுப்பினா்களும் இப்பிரச்னை குறித்து முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் உரிய அழுத்தம் கொடுத்து எந்த நிற அட்டை வைத்திருந்தாலும் ஏழைகள் பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்க புதுவை அரசை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com