காரைக்காலில் 222 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்ததாக

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 1059 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 63, கோயில்பத்து 27, திருநள்ளாறு 27, வரிச்சிக்குடி 26, திருப்பட்டினம் 15, நல்லம்பல் 13, கோட்டுச்சேரி 11, நெடுங்காடு 11, காரைக்கால்மேடு 9, நிரவி 7, அம்பகரத்தூா் 5, நல்லாத்தூா் 4, விழிதியூா் 4 போ் என மொத்தம் 222 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,28,443 பரிசோதனை செய்யப்பட்டதில் 11,398 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 9,159 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 73 வயது ஆண், நிரவியை சோ்ந்த 73 வயது ஆண், திருநள்ளாற்றை சோ்ந்த 72 வயது ஆண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அனைவருக்கும் இணை நோய்கள் இருந்தன. இதுவரை கரோனா தொற்றால் மாவட்டத்தில் 159 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 22,562 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,413 பேருக்கும் என 26,975 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com