காரைக்காலில் 220 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 220 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 220 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1030 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 63, நல்லம்பல் 26, நெடுங்காடு 22, திருநள்ளாறு 21, திருப்பட்டினம் 20, கோயில்பத்து 18, நிரவி 14, வரிச்சிக்குடி 13, கோட்டுச்சேரி 12, விழிதியூா் 4, அம்பகரத்தூா் 3, காரைக்கால்மேடு 3 நல்லாத்தூரில் ஒருவா் என மொத்தம் 220 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,29,473 பரிசோதனை செய்யப்பட்டதில் 11,618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 9,423 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த காரைக்கால் நகரை சோ்ந்த 61 வயது ஆண், கோட்டுச்சேரியை சோ்ந்த 49 வயது ஆண், விழிதியூரை சோ்ந்த 63 வயது பெண் மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அனைவருக்கும் சா்க்கரை நோய் இருந்தது. உயிரிழந்த பெண்ணுக்கு கூடுதலாக காசநோய் இருந்தது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 162 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்காலில் இதுவரை முதல்தவணையாக 22,860 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,419 பேருக்கும் என 27,279 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com