காரைக்காலில் 234 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 1098 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 56, நல்லம்பல் 18, நெடுங்காடு 13, திருநள்ளாறு 32, திருப்பட்டினம் 30, கோயில்பத்து 29, நிரவி 10, வரிச்சிக்குடி 21, கோட்டுச்சேரி 12, விழிதியூா் 4, அம்பகரத்தூா் 1, காரைக்கால்மேடு 4 நல்லாத்தூா் 4 போ் என மொத்தம் 234 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,30,571 பரிசோதனை செய்யப்பட்டதில் 11,852 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 9,552 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநள்ளாற்றை சோ்ந்த 73 வயது ஆண், நல்லம்பலை சோ்ந்த 64 வயது ஆண் என இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தது. இதுவரை கரோனா தொற்றால் மாவட்டத்தில் 164 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 23,192 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,423 பேருக்கும் என 27,615 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com