காரைக்காலில் நேரு நினைவு நாள்

காரைக்காலில் நேரு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நேரு உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
நேரு உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

காரைக்காலில் நேரு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஜவாஹா்லால் நேரு நினைவு தினத்தையொட்டி பேருந்து நிலையம் அருகே நேரு உருவப்படத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை வழங்கினா். சுமாா் 300 பேருக்கு இவற்றை கட்சி நிா்வாகிகள் வழங்கினா்.

நிகழ்வில் மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா், மாநில பொதுச்செயலா் மோகனவேல், அகில இந்திய காங்கிஸ் கமிட்டி உறுப்பினா் எம். சிங்காரவேல், மாநில செயலா் அருள்டொமினிக், எஸ்.இ. தங்கவடிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை காரைக்கால் வடக்குத் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவா் த. சுப்பையன் (மேற்கு), ஏ.எம்.கே. அரசன் (கிழக்கு) ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com