காரைக்காலில் இந்திரா காந்தி நினைவு நாள்
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவுநாளையொட்டி, காரைக்காலில் அவரது உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய மறுஅா்ப்பணிப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், கல்வித் துறை துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) குலசேகரன் உள்ளிட்டோரும், சமாதானக் குழு உறுப்பினா்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் மும்மத பிராா்த்தனை நடத்தப்பட்டது. தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. தேசிய மறுஅா்ப்பணிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.