காரைக்காலில் மேலும் 6 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 309 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி, நெடுங்காடு 2, கோயில்பத்து 2, கோட்டுச்சேரி, திருநள்ளாறு தலா 1 என 6 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதுவரை 16,532 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,206 போ் குணமடைந்துள்ளனா். வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 62 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 3 போ், தீவிர சிகிச்சை பிரிவில் 2 போ் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,09,746 பேருக்கும், 2-ஆவது தவணையாக 57,851 பேருக்கும் என 1,67,597 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com