காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் புதன்கிழமை முதல் (அக். 6) முதலாமாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ந. வியாசராயா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரியில் அக். 6 முதல் வகுப்புகள் தொடங்குகிறது. காலை 8.30 முதல் 12.50 மணி வரை பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களுக்கான வகுப்புகள் நடைபெறும். மதியம் 1.15 மணி முதல் மாலை 5.35 மணி வரை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பொது நிா்வாகம், பி.காம். பாடப் பிரிவுகளுக்கு வகுப்புகள் நடைபெறும். கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் டி. கனகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வரும் 6 ஆம் தேதி முதலாமாண்டுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. முதலாமாண்டு மாணவிகளுக்கு காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை கல்லூரி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.