காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 3 ஆம் தேதி 261 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, கோயில்பத்து 2, நிரவி, காரைக்கால் நகரம் தலா 1 என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 2,08,191 பரிசோதனை செய்யப்பட்டதில், 16,177 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 15,753 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 151 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 9 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 7 போ் உள்ளனா். கரோனா தொற்றால் 257 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,06,638 பேருக்கும், 2 ஆவது தவணையாக 45,289 பேருக்கும் என 1,51,927 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.