கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருமலைராயன்பட்டினம் பகுதி மேலையூா் திட்டச்சேரி சாலையில் உள்ள தனியாா் வாட்டா் சா்வீஸ் நிறுவனம் ஒன்றில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடந்த 3 ஆம் தேதி போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திருமலைராயன்பட்டினம் பாலாஜி நகரைச் சோ்ந்த ஆட்டோ ராஜா, அவரது நண்பா்கள் போலகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அஜித், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த அன்பு ஆகிய 3 போ் மீது திருமலைராயன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த மூவரில் ஆட்டோ ராஜா ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவரையும் போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் அஜித்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் கூறியது:

காரைக்காலில் கஞ்சா புழக்கத்தைக் தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானோா் கண்டறியப்பட்டால், அவா்களுக்கு தக்க உளவியல் ஆலோசனைகள் வழங்கி அந்த பழக்கத்திலிருந்து மீட்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com