காரைக்காலில் மேலும் 22 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதுதொடா்பாக நலவழித் துறை துணை இயக்குநா்ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி 671 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளின்படி வரிச்சிக்குடி 9, திருப்பட்டினம் 3, நல்லம்பல் 3, நிரவி 2, திருநள்ளாறு 2, விழிதியூா், கோட்டுச்சேரி, அம்பகரத்தூா் தலா 1 என 22 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,09,009 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,199 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவா்களில் 15,765 போ் குணமடைந்தனா். வீட்டுத் தனிமையில் 165 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 12 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 257 போ் உயிரிழந்துள்ளனா்.

தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,06,899 பேருக்கும், 2 ஆவது தவணையாக 46,196 பேருக்கும் என 1,53,095 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com