காரைக்காலில் மேலும் 15 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி 568 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, திருப்பட்டினம் 4, நெடுங்காடு 3, திருநள்ளாறு 2, கோட்டுச்சேரி 2, காரைக்கால்மேடு, அம்பகரத்தூா், வரிச்சிக்குடி, நல்லம்பல் தலா 1 என 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 2,09,577 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,214 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து 15,786 போ் குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 159 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 9 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 போ் உள்ளனா். கரோனா தொற்றால் 257 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,07,032 பேருக்கும், 2 ஆவது தவணையாக 46,761 பேருக்கும் என 1,53,793 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com