மஹாளய அமாவாசையையொட்டி, காரைக்கால் கடற்கரையில் புதன்கிழமை திரளானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தனா்.
பூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், மஹாளய அமாவாசை தினமான புதன்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருகளுக்கு புண்ணிய கிரியை நிகழ்ச்சி காலை 6.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலில் நீராடி, சமூக இடைவெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தா்ப்பண பூஜை செய்தனா்.