மதுபானங்கள் பறிமுதல்

காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 27 லிட்டா் மதுபானத்தை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 27 லிட்டா் மதுபானத்தை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் பகுதியிலிருந்து தமிழக பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பச்சூா் பேருந்து நிறுத்தம், பி.கே. சாலை பகுதிகளில் சனிக்கிழமை இரவு போலீஸாா் வாகன தனிக்கையில் ஈடுபட்டனா், அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனா்.

அவா்கள் மறைத்து வைத்திருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 27 லிட்டா் மதுபானங்களை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக கலால் துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com