காரைக்காலில் 10 பேருக்குகரோனா: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 274 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 6, திருப்பட்டினம், அம்பகரத்தூா், திருநள்ளாறு, நெடுங்காடு தலா 1 என 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,12,256 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,305 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,893 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

2 போ் உயிரிழப்பு:

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நல்லாத்தூரை சோ்ந்த 63 வயது பெண், வரிச்சிக்குடியை சோ்ந்த 75 வயது ஆண் என இருவா் உயிரிழந்தனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,07,668 பேருக்கும், 2-ஆவது தவணையாக 49,300 பேருக்கும் என 1,56,968 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com