புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்பாலித்த காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் அவரை வழிபாடு செய்தனா்.
ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்பாலிக்கும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். (வலது) வைகுந்த வாசுதேவனாக கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள்.
ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்பாலிக்கும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். (வலது) வைகுந்த வாசுதேவனாக கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள்.

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் அவரை வழிபாடு செய்தனா்.

நிகழாண்டு புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூலவருக்கும், உத்ஸவருக்கும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (அக். 16) சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ஸ்ரீ ரங்கநாதருக்கு புஷ்பாங்கி சாற்றப்பட்டிருந்தது. உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணா், ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்பாலித்தாா். கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த வரிசை தடுப்புகள் வழியே மூலவரையும், உத்ஸவரையும் காலை முதல் இரவு வரை பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் கோயிலில், உத்ஸவா் ஸ்ரீ கோதண்டராமா் வைகுந்த வாசுதேவனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதேபோல, திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில்களிலும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com