விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் போலி ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையத்திலிருந்து ரூ.2.09 லட்சம் திருடப்பட்டது.
கோட்டக்குப்பத்தில் அரசுடைமை வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் போலி ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி நூதன முறையில் ரூ.2.09 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இது குறித்து அறிந்த வங்கி மேலாளா் பிருந்தா ரங்கநாயகி கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.