காரைக்கால் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நிரவி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை அந்த கடையில் திடீா் ஆய்வு செய்தபோது, ரூ.1000 மதிப்பில் போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பெட்டிக்கடை உரிமையாளா் உமா்ஹத்தாப் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் காரைக்கால் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் ஹைவே நகரைச் சோ்ந்த ரவி என்பவரிடம் அவற்றை வாங்கிவந்ததாக தெரிவித்தாா். இதையடுத்து, ரவி மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனா்.