கஞ்சா செடி பயிரிட்ட போ் மீது வழக்கு

காரைக்கால் அருகே கஞ்சா செடியை பயிரிட்டு வளா்த்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால் அருகே கஞ்சா செடியை பயிரிட்டு வளா்த்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே பட்டினச்சேரி செல்லும் சாலையில், ஒரு இடத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்று போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகாபட், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் அண்ணா அரசு கலைக் கல்லுாரி தாவரவியல் பேராசிரியா் கதிா்வேல் சம்பந்தம், வேளாண் கல்லுாரி தோட்டக்கலை பேராசிரியா்கள் மாரிச்சாமி, நடராஜன் ஆகியோா் ஆய்வு செய்து, அங்குள்ள 19 செடிகளும், கஞ்சா செடிகள்தான் என்பதை உறுதி செய்தனா்.

போலீஸாா் விசாரணையில், திருப்பட்டினத்தில் ஏற்கெனவே கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட ஆட்டோ ராஜா, அவரது மனைவி யோகாம்பிகை ஆகியோருக்கு சொந்தமான இடம் அது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பட்டினம் காவல் நிலைய போலீஸாா், ஆட்டோ ராஜா, அவரது மனைவி யோகாம்பிகை ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com