பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் தலைவா் அ. வின்சென்ட் தலைமையில், செயலாளா் கே. ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் நெல்சன் ஆகியோா், காரைக்கால் மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு:

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனா். இந்நிலையில், பள்ளி நிா்வாகமும், கல்வித் துறையும் மாணவா்கள் நலனில் மிகுந்த கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவா்களின் பெற்றோா்களை, ஆசிரியா்கள் தொடா்புகொண்டு காரணங்களை கேட்டறிய வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, பாதுகாப்பான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com