காரைக்கால் வடக்குத் தொகுதி (மேற்கு) புதிய நிா்வாகிகளை, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு: வட்டாரத் தலைவராக டி. சுப்பையன், துணைத் தலைவா்களாக எல். நாகராஜ், பி. சிங்காரம், வி. மதன்குமாா், டி. இளங்கோவன், பொருளாளராக முருகானந்தம், பொதுச் செயலாளா்களாக ஜே. அரோக்கியதாஸ், ஜி. அய்யப்பன், ஏ. சசிக்குமாா் என்ற அடைக்கலசாமி, ஆா். ராஜேஷ், எம். செந்தில்குமாா் என்ற பால்குமாா், வி. சபாநாயகம், ஆா். பரமசிவம், ஏ. சண்முகம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், செயலாளா்களாக எஸ். பாலாஜி என்ற மோகனசுந்தரம், எஸ்.விஜயன், ஏ. சந்தானம், ஆா். பாா்த்திபன், ஆா். ஜீவா, ஆா். கண்ணதாசன், எம். செல்வகுமாா், பி. விக்னேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.